காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பா.ம.க சார்பில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
ஈரோடு:
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது. அந்த 6 வார காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. எனினும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.
இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். பா.ம.க. சார்பில் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.நீதிமன்றம் விதித்த காலகெடுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பா.ம.க. சார்பில் முதற்கட்டமாக வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று ஈரோடு மாநகரில் வில்லரசம்பட்டி பனங்காடு, பெரியசேமூர், அக்ரஹாரம், வண்டியூரான் கோவில், வளையக்கார வீதி,தண்ணீர்பந்தல் பாளையம், வெண்டிபாளையம், மூலப்பாளையம், ஆர்.என்.புதூர், சூரம்பட்டி அணைக்கட்டு பகுதி, கலைஞர் நகர், முத்துசாமி காலனி, அம்மன்நகர் உள்பட பகுதியிலும் நூற்றுக்கணக்கான வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதே போல் சத்தியமங்கலம், கோபி, அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, பெருந்துறை, விஜய மங்கலம், கவுந்தப்பாடி, சிவகிரி, கொடுமுடி, அரச்சலூர், மொடக்குறிச்சி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடியேற்றி பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஈரோடு வில்லரசம்பட்டி பனங்காடு பகுதியில் மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை. ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மாநில துணை பொதுச் செயலாளர் வேலுசாமி, மாவட்ட செயலாளர் கிருபாகரன், மாவட்ட துணை தலைவர் சேகர், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tmailnews