செய்திகள்

பண்ருட்டி அருகே கள்ளக்காதல் பிரச்சினையில் தொழிலாளி படுகொலை: 3 பேருக்கு கத்திக்குத்து

Published On 2018-01-20 10:38 GMT   |   Update On 2018-01-20 12:26 GMT
கள்ளக்காதல் பிரச்சினையில் தொழிலாளியை கத்தியால் குத்தி படுகொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 45), விவசாயி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கணவன்-மனைவிக் கிடையே நேற்று இரவு திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பெரியண்ணன் கத்தியை எடுத்து மனைவி பாக்கியலட்சுமியை சரமாரியாக குத்தினார். அவர் கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி ஏழுமலை (50), ராஜசேகர் (27), வெண்ணிலா (36) ஆகியோர் பெரியண்ணன் வீட்டுக்கு ஓடிவந்தனர். தகராறில் ஈடுபட்ட பெரியண்ணனை தடுத்தனர்.

அப்போது பெரியண்ணன் ஆத்திரம் அடைந்து அவர்களையும் கத்தியால் குத்தினார். இதில் ஏழுமலைக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலே இறந்தார். இதை அறிந்ததும் பெரியண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

காயம் அடைந்த பாக்கியலட்சுமி, ராஜசேகர், வெண்ணிலா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர். அங்கு அவர்களது நிலமை கவலைக் கிடமாக உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பி ண்டு சுந்தரவடிவேல் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட விவசாயி ஏழு மலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக பெரியண்ணனை நள்ளிரவு கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-


எனது மனைவி பாக்கியலட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதை அறிந்த நான் பாக்கியலட்சுமியை கண்டித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

நேற்று இரவும் மனைவியிடம் கள்ளக்காதலை கைவிடும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் பதில் ஏதும் கூறாததால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றேன். அவர் கூச்சல்போட்டதால் அருகில் வசித்த ஏழுமலை, மற்றும் கள்ளக்காதலன் ராஜசேகர், வெண்ணிலா ஆகியோர் ஓடிவந்து என்னை தடுக்க முயன்றனர். நான் ஆத்திரம் அடைந்து அவர்களையும் கத்தியால் குத்தினேன். இதில் விவசாயி ஏழுமலை பலியாகி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார். tamilnews

Tags:    

Similar News