செய்திகள்

கவர்னர் பன்வாரிலால் புரோகித் 14-ந் தேதி கடலூர் மாவட்டம் வருகை

Published On 2017-12-12 04:08 GMT   |   Update On 2017-12-12 04:08 GMT
கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 14-ந்தேதி சென்னையில் இருந்து ரெயில் மூலம் கடலூர் மாவட்டம் விருத்தசலத்திற்கு வருகிறார்.
கடலூர்:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

முதன் முதலாக அவர் கோவைக்கு சென்று பஸ் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டார். அங்கு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டமும் நடத்தினார்.

சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்று ‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அடுத்ததாக அவர் வருகிற 14-ந்தேதி(வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து ரெயில் மூலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருகிறார்.

விருத்தாசலத்தில் அரிமா சங்கம் சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்குகிறார். அதன் பிறகு அவர் கார் மூலம் கடலூருக்கு வந்து இரவில் தங்குகிறார்.

மறுநாள் (15-ந் தேதி) கடலூரில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் பகல் 2 மணி அளவில் அவர் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
Tags:    

Similar News