செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் பா.ம.க. பொதுக்கூட்டம்

Published On 2017-04-22 09:23 GMT   |   Update On 2017-04-22 09:23 GMT
தமிழ்நாட்டில் உள்ள 3321 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை பாராட்டும் வெற்றி விழா பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் மத்திய மாவட்டம் சார்பில் நாளை திருக்கழுக்குன்றத்தில் நடக்கிறது.
செங்கல்பட்டு:

தமிழ்நாட்டில் உள்ள 3321 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை பாராட்டும் வெற்றி விழா பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் மத்திய மாவட்டம் சார்பில் நாளை திருக்கழுக்குன்றத்தில் நடக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 3321 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை பாராட்டும் வெற்றி விழா பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் மத்திய மாவட்டம் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கழுக்குன்றம் பஸ்நிலையம் அருகில் நடக்கிறது.

கூட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் க.பாலு, மாநில துணை பொதுச்செயலாளர் கி.ஆறுமுகம், காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் பூ.வி.கி.வாசு, மாவட்ட துணை செயலாளர் எம்.ஜே.அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

Similar News