செய்திகள்
ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்: ஈஸ்வரன் பேட்டி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடா அதிகளவில் நடந்துள்ளது. இருந்தாலும் இந்த தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும் என ஈஸ்வரன் கூறினார்.
பீளமேடு:
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடா அதிகளவில் நடந்துள்ளது. இருந்தாலும் இந்த தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.
சுப்ரீம் கோர்டு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மது கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் கொண்டு வர முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளை மாற்றும் முடிவையும் கண்டிக்கிறோம்.
தென் இந்தியர்களை பற்றி தருண் விஜய் எம்.பி. யும், தேச துரோகிகள் என்று எச்.ராஜாவும் கூறியது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.