செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அரசு செயல்முறை விளக்கம் அழிக்காதது ஏன்?: கிராம மக்கள் கேள்வி

Published On 2017-03-02 10:48 IST   |   Update On 2017-03-02 10:48:00 IST
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அரசு செயல்முறை விளக்கம் அழிக்காதது ஏன்? என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே ஆகவேண்டும் என்பதில் மத்திய அரசும், இந்த திட்டத்தை ரத்து செய்தே ஆக வேண்டும் என்பதில் நெடுவாசல் கிராம மக்களும் உறுதியாக உள்ளனர்.

திட்டம் அறிவிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகியும் இதுவரை ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்ன? அதன் மூலம் என்னென்ன பலன்கள், நன்மைகள் என்ன, தீமைகள் என்ன, திட்டம் செயல்படுத்தப்படுவது எப்படி, எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை மத்திய அரசு இதுவரை தெளிவாக்க முன்வரவில்லை என்பது நெடுவாசல் கிராம மக்களின் குற்றச்சாட்டு.

தீங்கு வராது என்று மட்டும் கூறும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அதன் சாதகங்களாக 500 பேருக்கு வேலைவாய்ப்பு, குறைந்த அளவிலான நிலங்களே பயன்படுத்தப்படும் என்று மட்டுமே தெரிவித்துள்ளது.

அறிவியலாளர்கள், விஞ்ஞானிகளை கொண்டு நெடுவாசல் கிராமத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் திட்டம் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்க முன்வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.



ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவரப்பட்டால் விவசாய நிலம் அழியும், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. இதற்கு முறையான விளக்கத்தை மத்திய அரசு அறிவிக்காதது ஏன் என்றும் நெடுவாசல் கிராமத்தினர் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

Similar News