செய்திகள்
ஜெயலலிதா மரணம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது
ஜெயலலிதா மரணமடைந்தது அடுத்து அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
சிதம்பரம்:
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார். நேற்று அவரது உடல் அடக்கம் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் கோபுரத்தில் மாலையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. முதலாவதாக தெற்கு சன்னதி கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய சன்னதிகளில் உள்ள கோபுரங்களிலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் நடராஜர் சன்னதியிலும் மோட்ச தீபத்தை தீட்சிதர்கள் ஏற்றினர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார். நேற்று அவரது உடல் அடக்கம் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் கோபுரத்தில் மாலையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. முதலாவதாக தெற்கு சன்னதி கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய சன்னதிகளில் உள்ள கோபுரங்களிலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் நடராஜர் சன்னதியிலும் மோட்ச தீபத்தை தீட்சிதர்கள் ஏற்றினர்.