செய்திகள்

சிறுவாணி தமிழகத்துக்கு சொந்தமானது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2016-08-29 09:26 IST   |   Update On 2016-08-29 09:27:00 IST
சிறுவாணி தமிழகத்துக்கு சொந்தமானது என்று விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆலந்தூர்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறுவாணி தண்ணீரில் கேரளாவுக்கு சிறிதளவு உரிமை கூட கிடையாது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி செல்லும் தண்ணீரில் ஒரு சொட்டு கூட தமிழகத்துக்கு தருவதற்கு கேரளா தயார் இல்லை. சிறுவாணி முழுக்க முழுக்க தமிழகத்துக்கு சொந்தமானது. இந்த தண்ணீர் அவர்களுக்கு தேவையும் இல்லை.

இந்தநிலையில் சிறுவாணி தண்ணீரில் உரிமை கொண்டாடுவது வம்புக்கு இழுக்கும் செயல். இது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் முழு விவரங்களை ஆய்வு செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அதை பாகிஸ்தானால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுடன் கூடிய பொங்கல் விழா உறுதியாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News