செய்திகள்
7 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் மரகத பூங்கா.

7ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரம் மரகத பூங்காவை திறக்க அரசு முடிவு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2016-08-28 13:54 IST   |   Update On 2016-08-28 13:54:00 IST
7 ஆண்டுகளாக பிறகு மாமல்லபுரம் மரகதபூங்கா திறக்க போவதால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே கடந்த 2009-ம் ஆண்டு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மரகத பூங்கா உருவாக்கப்பட்டது.

பூங்கா வளாகத்தில் வார இறுதி நாளில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த நடனத் திடல், நடைபயிற்சி நடைமேடை, சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க கல் இருக்கைகள், என மாமல்லபுரம் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

பெயரளவுக்கு மரகத விழா என்ற பெயரில் ஒருமுறை நடன நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட்டு பூங்கா மூடப்பட்டது. பின்னர் பராமரிப்பின்றி பாம்புகள் பதுங்கும் இடமாகவும், சமூக விரோதிகள் மது அருந்தும் வளாகமாகவும் சீரழிந்து கிடந்தது. நகரின் மையப்பகுதியில் அழகான பூங்கா பயனற்று கிடப்பதை கண்டு சுற்றுலா ஆர்வலர்கள் பலர் அரசு பார்வைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் அதை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பூங்காவில் கூடுதலாக மூங்கில் குடில் உணவகம், கடல்மீன் ஸ்டால், சுற்றுலா தகவல் மையம், அம்மா குடிநீர், போன்ற வசதிகளுடன் விரைவில் திறக்கப்பட உள்ளது. சட்ட சபை கூட்டத்தில் அதற்கான அறிவிப்பும் வெளியானது.

7 ஆண்டுகளாக மூடிக் கிடந்த மரகதபூங்கா திறக்க போவதால் உள்ளூர் மக்க ளும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News