செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள வேங்கை மரத்தேர்

சென்னிமலை கோவிலில் உள்ள வேங்கை மர தேரை தங்க ரதமாக மாற்ற பக்தர்கள் வேண்டுகோள்

Published On 2016-08-24 11:18 IST   |   Update On 2016-08-24 11:18:00 IST
சென்னிமலை முருகன் கோவிலில் மலை மீது தற்போது பயன்படுத்தப்படும் வேங்கை மரத்தேரையே தங்கரதமாக மாற்ற வேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னிமலை:

சென்னிமலை முருகன் கோவிலில் மலை மீது தற்போது பயன்படுத்தப்படும் வேங்கை மரத்தேரையே தங்கரதமாக மாற்ற வேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னிமலையில் செயல்படும் ஸ்ரீ முருகன் மங்கள வார விழாக்குழு சார்பாக கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி வேங்கை மரத்தினை பயன்படுத்தி சிறிய தேர் செய்யப்பட்டு அந்த வேங்கை மர திருத்தேர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு செவ்வாய் கிழமை தோறும் கட்டணம் செலுத்தி திருத்தேர் உலா நடைபெற்றுவருகிறது.

இதனால் செவ்வாய் கிழமை இரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு பூஜையிலும், தேர் ஓட்டத்தையும் காண கூடுகிறார்கள். மேலும் இந்த செவ்வாய் கிழமை வழிபாட்டில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு வேண்டுகிறார்கள்

இதனால் தற்போதுள்ள வேங்கை மரத்தினால் ஆன பக்தர்களின் வழிபாட்டில் உள்ள வேங்கை மரத்தேரேயே தங்க ரதமாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் தமிழகத்திலேயே மிக உயரமாக தங்க ரதம் என்ற சிறப்பை பெறும். எனவே இந்த வேங்கைமர திருத்தேரையே தங்கரதமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News