செய்திகள்
பண்ருட்டியில் கனமழை: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மழைபெய்தபோது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, அண்ணாகிராமம், கண்டரக்கோட்டை, மருங்கூர் பகுதிகளில் நள்ளிரவு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. கொட்டித் தீர்த்த கணமழையால் பண்ருட்டி 4 முனை சந்திப்பு, கடலூர் சாலை, கும்பகோணம் சாலை பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. 2 மணி நேரம் மழை நீடித்தது. மழைபெய்தபோது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இதேபோல், பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் சுதன் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இரவு சுதன் வீட்டில் டேபிள்பேன் வைத்து தூங்கினான். கனமழை காரணமாக மழைநீர் வீட்டின் கூரை வழியே டேபிள்பேன் மீது விழுந்து கொண்டிருந்தது. இதனால் பேனில் மின்சாரம் பாய்ந்தது. அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சுதனின் கை எதிர்பாராத விதமாக டேபிள் பேன் மீது பட்டது.
உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சுதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, அண்ணாகிராமம், கண்டரக்கோட்டை, மருங்கூர் பகுதிகளில் நள்ளிரவு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. கொட்டித் தீர்த்த கணமழையால் பண்ருட்டி 4 முனை சந்திப்பு, கடலூர் சாலை, கும்பகோணம் சாலை பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. 2 மணி நேரம் மழை நீடித்தது. மழைபெய்தபோது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இதேபோல், பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் சுதன் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இரவு சுதன் வீட்டில் டேபிள்பேன் வைத்து தூங்கினான். கனமழை காரணமாக மழைநீர் வீட்டின் கூரை வழியே டேபிள்பேன் மீது விழுந்து கொண்டிருந்தது. இதனால் பேனில் மின்சாரம் பாய்ந்தது. அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சுதனின் கை எதிர்பாராத விதமாக டேபிள் பேன் மீது பட்டது.
உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சுதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.