செய்திகள்

கிராமங்களில் நடக்கும் குற்றங்கள் குறித்து பேச மறுப்பது ஏன்?: கொளத்தூர் மணி பேச்சு

Published On 2016-07-10 15:57 IST   |   Update On 2016-07-10 15:57:00 IST
பெரு நகரங்களில் நடக்கும் குற்றங்கள் பற்றி அரசியல் வாதிகள் பேசுவதை போல் கிராமங்களில் நடக்கும் குற்றங்களை, அநீதிகளை அரசியல்வாதிகள் ஏன் பேச மறுக்கிறார்கள் என்று கொளத்தூர் மணி பேசினார்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ள கடம்பூரில் பகுத்தறிவாளர் பயிற்சி பட்டறை வகுப்பு நடந்தது.

இந்த பயிற்சி வகுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் கடம்பூர் மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் திராவிட விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மராட்டியம், கார்நாடகாவில் அமலில் இருக்கும் மூட ஒழிப்பு சட்டத்தை தமிழகத்திலும் இயற்ற வேண்டும். பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருத பாட தினிப்புக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். சமஸ்கிருத பாடத்தை தினிக்க கூடாது.

பெரு நகரங்களில் நடக்கும் குற்றங்கள் பற்றி அரசியல் வாதிகள் பேசுவதை போல் கிராமங்களில் நடக்கும் குற்றங்களை, அநீதிகளை அரசியல்வாதிகள் ஏன் பேச மறுக்கிறார்கள்?

சென்னையில் நடந்த சுவாதி கொலை பற்றி பேசுபவர்கள் மேட்டூர் அருகே ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சனை பற்றி ஏன் பேசவில்லை? ஒரு குழந்தையை கொன்று குடத்தில் அடைத்ததை ஏன் பேசவில்லை. எதற்காக அதை பெரிது படுத்துவதில்லை?

அது ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சனை என்பதால் தானே பேச மறுக்கிறார்கள். இது வருத்தத்துக்குறியது.

இவ்வாறு கொளத்தூர் மணி பேசினார்.

மேலும் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், எழுத்தாளர் மணிமாறன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Similar News