செய்திகள்
பழனி பா.ஜ.க. கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த முக்கிய முடிவு எடுக்கப்படும்: மாநில செயலாளர் பேட்டி
பழனியில் நடைபெறும் மாநில முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என பா.ஜ.க. மாநில செயலாளர் செந்தில்பால சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அம்மாபேட்டை:
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டையை சேர்ந்த செந்தில்பால சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த இவரை கட்சியின் தலைமை சமீபத்தில் மாநில செயலாளராக நியமித்தது. நியமனத்திற்கு பின் தன் சொந்த ஊரான சிங்கம் பேட்டைக்கு வந்த அவரை கட்சி நிர்வாகிகள் பவானி மற்றும் சிங்கம்பேட்டையில் சிறப்பான முறையில் வரவேற்றனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மீது பொதுமக்கள் வைத்துள்ள அனுதாபங்களை வாக்குகளாக மாற்ற நேரடியாக மக்களை சந்தித்து செயல் திட்டங்களை வகுத்து நிர்வாகிகள் செயல்பட பாடுபடுவேன்.
மேலும் பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து பொதுமக்களின் குறைகளை அறிந்து நிறைவேற்ற பாடுபடுவேன்.
மாநிலத்தில் தற்போது ப.ஜ.கா.வில் 65 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் 15 லட்சம் வாக்குகளே பதிவாகி உள்ளன. மீதமுள்ள உறுப்பினர்கள் ஏன் வாக்களிக்கவில்லை? என ஆராயப்படும.
தமிழகத்தில் கண்னியாகுமரி மாவட்டம் எப்படி பா.ஜ.வின் கோட்டையாக உள்ளதோ, அதே போல் மேற்கு மண்டலத்தை பா.ஜ.வின் கோட்டையாக மாற்ற தீவிர முயற்சி எடுப்பேன்.
மேலும் வட மாநிலங்களில் பா.ஜ.வின் தலைமையில் ஆட்சி அமைந்தது போல் தமிழகத்திலும் பா.ஜனதாவின் ஆட்சி அமைய அரும்பாடுபடுவேன். பழனியில் நடைபெறும் மாநில முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில தொழில் நுட்ப பிரிவு செயலாளர் தெய்வசிகா மணி மற்றும் நிர்வாகிகள் சித்திவினாயம் பற்குணன், அம்மாபேட்டை ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டையை சேர்ந்த செந்தில்பால சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த இவரை கட்சியின் தலைமை சமீபத்தில் மாநில செயலாளராக நியமித்தது. நியமனத்திற்கு பின் தன் சொந்த ஊரான சிங்கம் பேட்டைக்கு வந்த அவரை கட்சி நிர்வாகிகள் பவானி மற்றும் சிங்கம்பேட்டையில் சிறப்பான முறையில் வரவேற்றனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மீது பொதுமக்கள் வைத்துள்ள அனுதாபங்களை வாக்குகளாக மாற்ற நேரடியாக மக்களை சந்தித்து செயல் திட்டங்களை வகுத்து நிர்வாகிகள் செயல்பட பாடுபடுவேன்.
மேலும் பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து பொதுமக்களின் குறைகளை அறிந்து நிறைவேற்ற பாடுபடுவேன்.
மாநிலத்தில் தற்போது ப.ஜ.கா.வில் 65 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் 15 லட்சம் வாக்குகளே பதிவாகி உள்ளன. மீதமுள்ள உறுப்பினர்கள் ஏன் வாக்களிக்கவில்லை? என ஆராயப்படும.
தமிழகத்தில் கண்னியாகுமரி மாவட்டம் எப்படி பா.ஜ.வின் கோட்டையாக உள்ளதோ, அதே போல் மேற்கு மண்டலத்தை பா.ஜ.வின் கோட்டையாக மாற்ற தீவிர முயற்சி எடுப்பேன்.
மேலும் வட மாநிலங்களில் பா.ஜ.வின் தலைமையில் ஆட்சி அமைந்தது போல் தமிழகத்திலும் பா.ஜனதாவின் ஆட்சி அமைய அரும்பாடுபடுவேன். பழனியில் நடைபெறும் மாநில முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில தொழில் நுட்ப பிரிவு செயலாளர் தெய்வசிகா மணி மற்றும் நிர்வாகிகள் சித்திவினாயம் பற்குணன், அம்மாபேட்டை ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.