செய்திகள்

அம்மாபேட்டை அருகே பள்ளி குழந்தைகளுடன் பள்ளத்தில் இறங்கிய தனியார் பள்ளி பஸ்

Published On 2016-06-14 10:53 IST   |   Update On 2016-06-14 10:53:00 IST
அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி பேருந்து குழந்தைகளுடன் பள்ளத்தில் இறங்கிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் உயிர் தப்பினர்.
அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்து உள்ள நெரிஞ்சிப்பேட்டையில் ஸ்ரீசரவணா நிகேதன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் பஸ் மற்றும் வேன் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த நிலையில் காலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள மேலும் குழந்தைகளை ஏற்றி வருவதற்க்காக சென்றது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது ‘‘இந்த பள்ளியின் பஸ் குழந்தைகளை ஏற்றவரும் போது நிறைய இடம் இருக்கும் இடத்தில் திருப்புவது இல்லை மெயின்ரோட்டில்தான் அதுவும் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த இடத்தில் தான் திருப்புகின்றனர்’’ என்று கூறினர்.

இந்த நிலையில் காலை பஸ்சின் டிரைவர் போக்குவரத்து மிகுந்த ரோட்டில் குழந்தைகளுடன் எம் ஏம் தோட்டம் எதிரில் திருப்பும்போது எதிர்பாராத விதமாக பஸ்ஸின் பின்பகுதி திடீர் என ரோட்டின் அருகில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது இதில் பஸ் கவிழாமல் நின்று கொண்டது குழந்தைகள் இதை கண்டு அலறினர். அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து குழந்தைகளை பஸ்சிலிருந்து இறக்கி மீட்டனர்.

நல்லவேலையாக குழந்தைகளுக்கு எந்தவித அடியும் படவில்லை. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்தில் இருந்து குழந்தைகள் உயிர் தப்பினர்.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும் போது இந்த இடத்தில் பஸ் திருப்புவதால் ஆபத்து என கூறியும் அலட்சியத்தால் பஸ்ஸை இயக்கியதால் இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தனர்.

Similar News