செய்திகள்
சுங்குவார்சத்திரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: பெண் - சிறுவன் பலி
சுங்குவார்சத்திரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் மற்றும் 2 வயது சிறுவன் பலியானார்கள். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
செங்கல்பட்டு, பாரதி செல்லம்மா தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார். பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யபிரியா இவர்களது 2-வது மகன் தேஜாய்.
நேற்று இரவு விஜயகுமார் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள அண்ணன் வீட்டிற்கு காரில் புறப்பட்டார். அவர்களுடன் விஜயகுமாரின் தாய் விசாலாட்சி, அண்ணி தேவி (வயது 30), அவரது 4 வயது மகள் லட்சுதா ஆகியோர் சென்றனர்.
நள்ளிரவு 12 மணியளவில் சுங்குவார்சத்திரத்தை அடுத்த தர்காமேடு அருகே கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரி மீது திடீரென கார் மோதியது.
இதில் கார் முழுவதும் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய தேவி, சிறுவன் தேஜாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் விஜயகுமார், அவரது மனைவி சத்யபிரியா, தாய் விசாலாட்சி, சிறுமி லட்சுதா ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து அறிந்ததும் சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த 4 பேருக்கும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிசிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு, பாரதி செல்லம்மா தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார். பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யபிரியா இவர்களது 2-வது மகன் தேஜாய்.
நேற்று இரவு விஜயகுமார் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள அண்ணன் வீட்டிற்கு காரில் புறப்பட்டார். அவர்களுடன் விஜயகுமாரின் தாய் விசாலாட்சி, அண்ணி தேவி (வயது 30), அவரது 4 வயது மகள் லட்சுதா ஆகியோர் சென்றனர்.
நள்ளிரவு 12 மணியளவில் சுங்குவார்சத்திரத்தை அடுத்த தர்காமேடு அருகே கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரி மீது திடீரென கார் மோதியது.
இதில் கார் முழுவதும் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய தேவி, சிறுவன் தேஜாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் விஜயகுமார், அவரது மனைவி சத்யபிரியா, தாய் விசாலாட்சி, சிறுமி லட்சுதா ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து அறிந்ததும் சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த 4 பேருக்கும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிசிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.