செய்திகள்
தாம்பரம் அருகே தனியார் குடோனில் தீ விபத்து
தாம்பரம் அருகே தனியார் குடோனில் தீ விபத்து
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே படப்பை மணிமங்கலம் சாலையில் தனியார் மீன் பண்ணை ஒன்று உள்ளது. இதன் அருகில் உள்ள குடோனில் மீன்கள் மற்றும் நாய்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மொத்தமாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மீன் மற்றும் நாய்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த அட்டை பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 4 மணி நேரம் போராடி குடோனில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த உணவு பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே படப்பை மணிமங்கலம் சாலையில் தனியார் மீன் பண்ணை ஒன்று உள்ளது. இதன் அருகில் உள்ள குடோனில் மீன்கள் மற்றும் நாய்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மொத்தமாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மீன் மற்றும் நாய்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த அட்டை பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 4 மணி நேரம் போராடி குடோனில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த உணவு பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.