தமிழ்நாடு

காரில் 515 கிலோ குட்கா பொருட்கள் கடத்தல்: வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2023-10-20 07:35 GMT   |   Update On 2023-10-20 07:35 GMT
  • கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் பகுதியில் காவேரிப்பட்டினம் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
  • கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து குட்கா பொருட்களை சேலத்துக்கு கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது

காவேரிப்பட்டினம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாபுரம் பகுதியில் காவேரிப்பட்டினம் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வேகமாக வந்த காரை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை திறந்து சோதனை செய்தபோது அதில் 515 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தன.

இதனையடுத்து காவேரிப்பட்டினம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குட்கா பொருட்களை கடத்தியவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோ கர்சிங் (வயது 27), மதன்சிங் (19) என்பதும் அவர்கள் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து குட்கா பொருட்களை சேலத்துக்கு கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது விசாரணை செய்து வருகின்றனர். குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News