தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம், தாம்பரம், கோயம்பேட்டில் இருந்து 150 சிறப்பு பஸ்கள்- அதிகாரி தகவல்

Published On 2023-07-21 11:22 IST   |   Update On 2023-07-21 11:23:00 IST
  • காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
  • கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 150 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பஸ்களில் திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு 60 சிறப்பு பஸ்களும், தாம்பரத்தில் இருந்து திருச்சி, விழுப்புரம் பகுதிகளுக்கு 40 சிறப்பு பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 150 பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டலம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News