தமிழ்நாடு

இலங்கை சிறையில் விடுவிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் சென்னை திரும்பினர்

Published On 2023-08-29 10:25 GMT   |   Update On 2023-08-29 10:25 GMT
  • இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 10 பேரையும் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.
  • மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் நாகை மீனவர்கள் 10 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆலந்தூர்:

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 7-ந்தேதி அதிகாலை கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 10 பேரையும் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் நாகை மீனவர்கள் 10 பேரும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் 10 பேரும் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News