செஸ் ஒலிம்பியாட்- 3வது சுற்றில் இந்திய அணி வெற்றி
- இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய ஈஷாவின் போட்டி டிராவில் முடிந்தது.
- இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்தியா வெற்றிப் பெற்றார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று மூன்றாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. சரியாக, 3 மணியளவில் தொடங்கிய 3-வது சுற்றுக்கான இத்தொடரில், இந்தியா சார்பில் 6 அணிகள் களமிறங்கின.
இந்நிலையில், இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்தியா வெற்றிப் பெற்றார். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த எதிரணி வீராங்கனை பங்கேற்காததால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவின் ரவுனக் சத்வானி 3-வது சுற்றில் வெற்றி பெற்றார். சுவிஸ் வீரர் பேபியனை எதிர்கொண்டபோது 38-வது நகர்த்தலில் இந்தியாவின் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார்.
இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய ஈஷாவின் போட்டி டிராவில் முடிந்தது.
தொடர்ந்து, இந்தியாவின் பொதுப்பிரிவு ஏ அணியில் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றிப் பெற்றுள்ளார்.
மேலும், இந்திய பொதுப்பிரிவு சி அணியில் விளயைாடிய அபிஜித் குப்தாவும் வெற்றிப் பெற்றுள்ளார். ஐஸ்லாந்து அணி வீரரை எதிர்கொண்டு விளையாடியபோது 36வது நகர்த்தலில் அபிஜித் குப்தா வெற்றி பெற்றார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஓபன் சி அணியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் சேதுராமன் வெற்றப் பெற்றுள்ளார். ஐஸ்லாந்து வீரர் ஹான்ஸை தனது 36வது நகர்வில் சேதுராமன் வீழ்த்தினார்.
இதேபோல், இந்திய மகளிர் பி பிரிவில் விளையாடிய வந்திகா அகர்வால் வெற்றிப்பெற்றுள்ளார். இந்தோனேஷியா அணி வீராங்கனை சுகந்தரை தனது ௪௫வது நகர்த்தலில் வந்திகா அகர்வால் வீழ்த்தியுள்ளார்.
இதற்கிடையே, இந்திய மகளர் சி பிரிவில் விளையாடிய சாஹிதி ஆஸ்திரியாவின் மேருபரிடம் தோல்வியடைந்துள்ளார்.