விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: 17 பேருக்கு பீடே மாஸ்டர் பட்டம்

Published On 2022-08-09 08:14 GMT   |   Update On 2022-08-09 08:14 GMT
  • மகளிர் பிரிவில் 21 பேருக்கு பீடே மாஸ்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
  • ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களை சேர்ந்த வீரர்கள் இதற்கு தகுதி பெற்று உள்ளனர்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 17 பேருக்கு பீடே (சர்வதேச செஸ் கூட்டமைப்பு) மாஸ்டர் பட்டம் வழங்கப்படுகின்றன. உடனடியாக இந்த பட்டங்களை பெற ஒருவர் குறிப்பிட்ட காலத்துக்குள் ரேட்டிங் புள்ளிகள் 2,100-யை பெற்று இருக்க வேண்டும். போட்டி முடிவில் மேலும் சில வீரர்கள் பீடே மாஸ்டர் பட்டம் பெற வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே இந்திய வீரர்கள் இந்த பட்டங்களை பெற்று விட்டனர். ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களை சேர்ந்த வீரர்கள் இதற்கு தகுதி பெற்று உள்ளனர்.

மகளிர் பிரிவில் 21 பேருக்கு பீடே மாஸ்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பட்டங்களை பெற குறைந்தது 1900 ரேட்டிங் புள்ளிகள் பெற்று இருக்க வேண்டும்.

Tags:    

Similar News