விளையாட்டு

3 ஒருநாள் போட்டி: இந்திய அணி ஜிம்பாப்வே செல்கிறது

Published On 2022-08-09 06:38 GMT   |   Update On 2022-08-09 06:38 GMT
  • ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • தீபக் சாகர், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

ஹராரே:

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

ஒருநாள் போட்டி (3 ஆட்டம்) தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் போட்டி (5 ஆட்டம்) தொடரை 4-1 என்ற கணக் கிலும் இந்தியா கைப்பற்றியது.

அடுத்து இந்திய அணி ஜிம்பாப்வே சென்று விளையாடுகிறது. 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

வருகிற 18-ந்தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கிறது. 2-வது போட்டி 20-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22-ந்தேதியும் நடக்கிறது. மூன்று போட்டிகளும் ஹராரேவில் நடக்கிறது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். தீபக் சாகர், வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, தீபக் ஹுடா, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அேலஷ்கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாகர்.

Tags:    

Similar News