விளையாட்டு
பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஜோடி
- சீனாவில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
பீஜிங்:
சீனாவின் ஹாங்சு நகரில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் தரவரிசையில் உலகின் 'டாப்-8' ஜோடி இதில் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
இந்தியா சார்பில் ஆண்கள் இரட்டையரில் உலகத் தரவரிசையில் நம்பர்-3 ஆக உள்ள சாத்வித் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்றது.
இந்நிலையில், இந்திய ஜோடி நேற்று தனது 3-வது போட்டியில் மலேசியாவின் ஆரோன் சியா-சோ இக் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 17-21 என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 21-18, 21-15 என வென்றது. இதன்மூலம் இந்திய ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.