விளையாட்டு

டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி: புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா

Published On 2025-05-16 23:46 IST   |   Update On 2025-05-16 23:46:00 IST
  • டயமண்ட் லீக் தடகள போட்டி தோஹாவில் நடந்து வருகிறது.
  • நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்தார்.

தோஹா:

டயமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடந்து வருகிறது. இதன் 3-வது சுற்று கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.

இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் களமிறங்குகின்றனர்.

இந்நிலையில், இன்று நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். போட்டியின் முடிவில் அவர் 2வது இடம் பிடித்தார்.

ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடம் பிடித்தார்.

நீரஜ் சோப்ரா இதற்கு முன் 2022 ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் போட்டியில் 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்தது. 90 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ரா 3வது ஆசியவீரர் என்ற பெருமை பெற்றார்.

புதிய சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Tags:    

Similar News