விளையாட்டு

சவுரவ் கோசல்

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்- முதல் தங்கம் வென்றது இந்திய ஆடவர் அணி

Published On 2022-11-04 08:56 GMT   |   Update On 2022-11-04 08:56 GMT
  • சவுரவ் கோசல் தலைமையிலான இந்திய அணி 2-0 என குவைத் அணியை வீழ்த்தியது.
  • இந்திய பெண்கள் அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

சியோங்ஜு:

தென் கொரியாவின் சியோங்ஜு நகரில் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றில், சவுரவ் கோசல் தலைமையிலான இந்திய அணி 2-0 என குவைத் அணியை வீழ்த்தியது.

இந்தியாவின் நட்சத்திர வீரரான சவுரவ் கோசல் குவைத்தின் அமர் அல்டாமிமியை 11-9, 11-2, 11-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் ரமித் தாண்டன் 11-5, 11-7, 11-4 என்ற செட்கணக்கில் அலி அரமேசியை வென்றார். கடைசி ஆட்டத்தில் அபய் சிங், பலாஹ் முகமது மோதுவதாக இருந்தது. ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால், இப்போட்டி விளையாடப்படவில்லை. 2-0 என வெற்றி பெற்ற இந்திய ஆடவர் அணி, முதல்முறையாக தங்கம் வென்றது.

இதேபோல், இந்திய பெண்கள் அணி அரையிறுதியில் மலேசியாவிடம் 1-2 என தோல்வியடைந்ததால், வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

Tags:    

Similar News