புரோ கபடி லீக்: முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது தபாங் டெல்லி
- புரோ கபடி லீக் ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வருகிறது.
- புள்ளிப்பட்டியலில் தபாங் டெல்லி அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
சென்னை:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மூன்றாவது கட்டமாக சென்னையில் நடைபெற்றது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடந்த 75-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்சை எதிர்கொண்டது.
திரில்லிங்கான இந்த மோதலில் டெல்லி அணி 39-33 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, 12-வது வெற்றியை ருசித்தது. அத்துடன், நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இத்துடன் சென்னையில் லீக் சுற்று முடிவுக்கு வந்தன. அடுத்தகட்ட ஆட்டங்கள் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடக்கும் இடத்தை புரோ கபடி லீக் நிர்வாகம் நேற்று அறிவித்தது.
இதன்படி வரும் 25-ம் தேதி தொடங்கும் பிளே-ஆப் சுற்று மற்றும் 31-ம் தேதி அரங்கேறும் இறுதிப்போட்டி டெல்லியில் நடக்கிறது.