மார்கிரம் அதிரடி: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை ஊதித் தள்ளியது தென் ஆப்பிரிக்கா
- முதலில் ஆடிய இங்கிலாந்து 131 ரன்களுக்கு சுருண்டது.
- ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி 54 ரன்னில் வெளியேறினார்.
லீட்ஸ்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி லீட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 24.3 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 54 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டும், வியான் முல்டர் விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.
மார்கிரம், ரிக்கல்டன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். அவர் 55 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட்டுக்கு மார்கிரம்-ரிக்கல்டன் ஜோடி 121 ரன்கள் சேர்த்து அசத்தியது.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.