கிரிக்கெட் (Cricket)
null

முஸ்லிம் என்பதால் சர்பராஸ் கானுக்கு இடமில்லை: காங்கிரஸ் பெண் தலைவர் குற்றச்சாட்டு

Published On 2025-10-22 19:45 IST   |   Update On 2025-10-22 20:27:00 IST
  • ரிஷப் பண்ட் தலைமையில் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முகமது சிராஜ், கலீல் அகமது உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சர்பராஸ் கான். 28 வயதான இவர் முதல்தர போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால் இளம் வயதில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், தன்னுடைய தொடர் முயற்சியால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். பிப்ரிவரி முதல் நவம்பர் வரை 6 போட்டிகளில் 11 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 3 அரைசதங்களுடன் 371 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.10 ஆகும்.

அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் ரிஷப் பண்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கெதிரான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டது. இதில் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பெண் செய்தி தொடர்பாளரான ஷமா முகமது, "சர்பராஸ் கான் அவருடைய குடும்ப பெயரால், இந்தியா ஏ கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விசயத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் நிலைப்பாடு எங்கே என்பது எங்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்திருந்தார்.

 இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் அரசியலை கலப்பதாக பாஜக தலைவர்கள் கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளனர்.

பாஜக தலைவர் பூனவல்லா ஷமா முகமதுவுக்கு பதில் கொடுக்கும் வகையில் "இந்தப் பெண்மணியும் அவருடைய கட்சியினரும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். ரோகித் சர்மாவை உருவக் கேலி பிறகு, அவரும் அவருடைய கட்சியினரும் நமது கிரிக்கெட் அணியை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க விரும்புகிறார்களா? நாட்டைப் பிரித்த பிறகும் அவர்கள் திருப்தி அடையவில்லையா?).

இதே அணியில் முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமதுவும் விளையாடுவார்கள். இந்தியாவை வகுப்புவாத, சாதி அடிப்படையில் பிரிப்பதை நிறுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இதே ஷமா மொகமதுதான் ரோகித் சர்மா பருத்த உடல் கொண்டு விளையாட்டு வீரர் எனக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பதவியை நீக்கினார்.

Tags:    

Similar News