செய்திகள்
பிரதாப் சிங் தோமர்

50மீ ரைபிஃபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதல்: இந்திய வீரர்கள் ஏமாற்றம்

Published On 2021-08-02 07:26 GMT   |   Update On 2021-08-02 10:40 GMT
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 21-வது இடத்தையும், சஞ்சீவ் ராஜ்புட் 32-வது இடத்தையும் பிடித்து இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர்.
துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சஞ்சீவ் ராஜ்புட் உள்பட 39 வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பாக செயல்படும் 8 வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் நீலிங் (Kneeling) முறை சுடுதலில் 397 புள்ளிகளும், ப்ரோன் (Prone) முறை சுடுதலில் 391 புள்ளிகளும், ஸ்டேண்டிங் (Standing) முறை சுடுதலில் 379 புள்ளிகளும் என மொத்தம் 1167-63x புள்ளிகள் பெற்று 21-வது இடத்தை பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார்.



மற்றொரு இந்திய வீரர் சஞ்ஜீவ் ராஜ்புட்  நீலிங் (Kneeling) முறை சுடுதலில் 387 புள்ளிகளும், ப்ரோன் (Prone) முறை சுடுதலில் 393 புள்ளிகளும், ஸ்டேண்டிங் (Standing) முறை சுடுதலில் 377 புள்ளிகளும் என மொத்தம் 1157-55x புள்ளிகள் பெற்று 32-வது இடத்தை பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார்.
Tags:    

Similar News