செய்திகள்
ஜோகோவிச்

டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்தையும் இழந்தார் ஜோகோவிச்

Published On 2021-07-31 09:23 GMT   |   Update On 2021-07-31 09:23 GMT
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கல பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை ஜோகோவிச் போராடி இழந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் பேப்லோ கரீரியோ பஸ்டா இடையே நடைபெற்றது. போட்டியின் முதல் செட்டை கரீரியோ 6-4 என கைப்பற்றினார். 

டை-பிரேக்கர் வரை சென்ற 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார். இதனால் போட்டி 1-1 என சமநிலைப் பெற்றது.



3-வது செட்டிலும் ஸ்பெயின் வீரர்  பேப்லோ கரீரியோ பஸ்டா ஆதிக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் பேப்லோ கரீரியோ பஸ்டா 5-3 என முன்னிலைப் பெற்றிருந்தார். சர்வீஸ் செய்த பேப்லோ கரீரியோ பஸ்டா, 6-4 என 3-வது செட்டை கைப்பற்றி ஜோகோவிச்சை தோற்கடித்தார்.

தங்கம் வென்று சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் வெண்கல பதக்கம் கூட பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.
Tags:    

Similar News