செய்திகள்
தீபக் சாஹர்

பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் ஆர்டரை சீர்குலைத்த தீபக் சாஹர்

Published On 2021-04-16 15:05 GMT   |   Update On 2021-04-16 15:05 GMT
பஞ்சாப் கிங்ஸ் அணி பவர்-பிளேயில் முன்னணி பேட்ஸ்மேன்களை இழந்து திணறி வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது.

மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ரன்கள் குவித்ததுபோல் குவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தனர். ஆனால் தீபக் சாஹர் அவர்கள் எண்ணத்திற்கு முற்றிலுமாக தடைபோட்டார்.

முதல் ஓவரின் 4-வது பந்திலேயே மயங்க் அகர்வாலை ரன்ஏதும் எடுக்க விடாமல் க்ளீன் போல்டாக்கினார். 6-வது பந்தில் கிறிஸ் கெய்ல் கேட்ச் கொடுத்ததை ருத்துராஜ் பிடிக்க தவறினார்.

3-வது ஓவரின் 5-வது பந்தில் கேஎல் ராகுல் ரன்அவுட் ஆனார். 5-வது ஓவரின் 2-வது பந்தில் கிறிஸ் கெய்லை 10 ரன்னிலும், 4-வது பந்தில் நிக்கோலஸ் பூரனை டக்அவுட்டிலும் வெளியேற்றினார். இதனால் பஞ்சாப் அணி பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களே எடுத்தது.



தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீச தொடர்ச்சியாக நான்கு ஓவர்கள் வீசி வைத்தார் எம்எஸ் டோனி. 7-வது ஓவரை தீபக் சாஹர்தான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹூடாவை 10 ரன்னில் வெளியேற்றினார். தொடர்ச்சியாக நான்கு ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி பஞ்சாப் அணியின் பேட்டிங்கை சீர்குலைத்தார்.
Tags:    

Similar News