செய்திகள்
வெங்கி மைசூர்

‘நூறு பந்து’ லீக்கில் முதலீடா?: கேகேஆர் சிஇஓ வெங்கி மைசூர் விளக்கம்

Published On 2020-05-07 11:52 GMT   |   Update On 2020-05-07 11:52 GMT
இங்கிலாந்தில் தொடங்கப்பட்டுள்ள ‘நூறு பந்து’ லீக்கில் முதலீடு செய்ய இருக்கிறது என்ற செய்தி வெளியானது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணியின் உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் முதலீடு செய்து வருகின்றனர். கடந்த 2015-ல் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடும்  அணிகளில் ஒன்றான டிரினாட்டை விலைக்கு வாங்கியது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு நூறு பந்து கிரிக்கெட் லீக்கை (The Hundred) நடத்த இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் முதலீட்டிற்கு தடைவிதித்துள்ளது.

தற்போது 300 மில்லியன் பவுண்டுகள் இழப்பை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் தங்களது முதலீடு கொள்கையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ‘நூறு பந்து’ தொடரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் முதலீடு செய்ய இருப்பதாக வெளிவந்துள்ள செய்திகளை நான் அறிவேன். நான் சொல்லும் செய்தி என்னவென்றால், அவர்கள் எங்களை அணுகினால், முதலீடு செய்வது குறித்து ஆலோசிப்போம். அது குறித்து மதிப்பீடு செய்வோம்.

ஐபிஎல்-லில் நாங்கள் மிகப்பெரிய பிராண்ட் ஆக இருக்கிறோம். நாங்கள் மட்டுமே கிரிக்கெட்டில் உலகளாவிய பிராண்ட். உலகளவில் நடைபெறும் லீக்குகள் நைட் ரைடர்ஸ் பிராண்ட்-ஐ சேர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருவதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது’’ என்றார்.
Tags:    

Similar News