செய்திகள்
பார்தீவ் பட்டேல்

எனக்கு எல்லா விரல்களும் இருந்திருந்தால்... பார்தீவ் பட்டேல் இப்படி கூற காரணம்?

Published On 2020-04-28 12:07 GMT   |   Update On 2020-04-28 12:07 GMT
17 வயதில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகம் ஆன பார்தீவ் பட்டேல் ஒன்பது விரல்களுடன் விளையாடியது குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
பள்ளியில் படிக்கும் வயதான 17-ல் 2002-ம் ஆண்டு இந்திய அணியில் காலடி எடுத்து வைத்தவர் பார்தீவ் பட்டேல். இங்கிலாந்துக்கு எதிராக முதன்முறையாக 2003-ல் அறிமுகம் ஆனார். தலைசிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்த்து சிறு வயதில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

பின்னர் எம்எஸ் டோனி இந்திய அணிக்குள் நுழைய பார்தீவ் பட்டேலால் ஒரு பேட்ஸ்மேனாகக் கூட இடம் பிடிக்க முடியாமல் போனது. தற்போது ஆர்சிபி அணிக்காகவும், ரஞ்சி கோப்பையில் குஜராத் அணிக்காகவும் விளையாடி வருகிறது.

இவரது இடது கையில் சுண்டு விரல் ஒரு விபத்தின்போது கட்டாகிவிட்டதாம். இதனால் ஒன்பது விரல்களுடன்தான் விளையாடியுள்ளார். ஒருவேளை 10 விரல்களும் இருந்திருந்தால் அது எப்படி இருந்திருக்கும் எனத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பார்தீவ் பட்டேல் கூறுகையில் ‘‘எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது இடது கையின் சுண்டு விரல் கதவுக்கு இடையில் மாட்டிக்கொண்டு கட்டாகிவிட்டது. விக்கெட் கீப்பிங் குளோவுக்குள் கடைசி விரல் சரியாக சேராது. இது சற்று கடினமாக இருக்கும். ஆகவே குளோவ் உடன் டேப் சுற்றி விடுவேன்.

தற்போது அதை நினைக்கும்போது 10 விரல்களும் இருந்திந்தால் என்ன நடந்திருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒன்பது வீரர்களுடன் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக பணியாற்றியதை சிறந்ததாக உணர்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News