செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கவாஸ்கர், புஜாரா, பாருபள்ளி காஷ்யப் நிதியுதவி
விளையாட்டுத்துறையைச் சேர்ந்த கவாஸ்கர், புஜாரா, பாருபள்ளி காஷ்யப் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி செய்துள்ளனர்.
இந்தியா கொரோனா வைரஸ் தொற்று என்ற கொடியை நோயை எதிர்த்து போரிட்டு வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கைக்கு நிதி வழங்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதேபோல் ஒவ்வொரு மாநில அரசுகளும் தெரிவித்திருந்தன.
இதனால் பிரபலங்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, விராட் கோலி, முன்னாள் வீரரும் தற்போதைய எம்.பி.யுமான கவுதம் கம்பிர், யுவராஜ் சிங், சச்சின் தெண்டுல்கர் உள்பட ஏராளமானோர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் பிரதமர் நிவாரண நிதிக்கு 35 லட்சம் ரூபாயும், மகாராஷ்டிரா மாநில அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 24 லட்சமும் வழங்கியுள்ளார்.
அதேபோல் டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரரான புஜாரா ஒரு குறிப்பிட்ட தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கும், குஜராத் மாநில முலமைச்சர் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார்.
பேட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப் 3 லட்சம் ரூபாய் தெலங்கான முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.