செய்திகள்
ரகானே

கடல் தன்ணீரின் ஒரு துளி: 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய ரகானே

Published On 2020-03-29 11:59 GMT   |   Update On 2020-03-29 11:59 GMT
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரகானே, பிரதமர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி, தன்னுடைய சிறிய பங்களிப்பு எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பிடியில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள நிவாரணம் வழங்கி உதவி செய்யலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கி வருகின்றனர்.

பிசிசிஐ 51 கோடி ரூபாய் அளித்துள்ளது, சுரேஷ் ரெய்னா 52 லட்சம் ரூபாய் தருவதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரகானே 10 லட்சம் வழங்குகிறார்.

இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘என்னுடைய சிறிய பங்களிப்பு. கடல் தண்ணீரின் ஒரு துளி போன்றது. இந்த கடினமான சூழ்நிலையில் என்னுடைய சிறந்த ஆதரவை கொடுப்பேன். வீ்ட்டில் தங்கியிருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News