செய்திகள்
மயங்க் அகர்வால்

முதல் செசன் முழுவதும் விளையாடி மயங்க் அகர்வால் சாதனை

Published On 2020-02-21 15:28 IST   |   Update On 2020-02-23 10:07:00 IST
மனோஜ் பிரபாகருக்குப் பிறகு (1990-ம் ஆண்டு) நியூசிலாந்துக்கு எதிராக முதல் செசன் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடி சாதனைப் படைத்துள்ளார் மயங்க் அகர்வால்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. ஆடுகளம் பச்சைபசேல் போன்று காட்சியளித்தது. இதனால் டாஸ் வென்றதும் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் யோசிக்காமல் பந்து வீசு்சை தேர்வு செயத்து.

இந்திய அணி புதுப்பந்தில் நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 16  ரன்னிலும், அடுத்து வந்த பஜாரா 11 ரன்னிலும்ம, விராட் கோலி 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால், தொடக்க வீரர்  மயங்க் அகர்வால் பொறுமையாக விளையாடினார். இதனால் முதல்நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது மயங்க் அகர்வால் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

இதன்மூலம் 30 வருடத்திற்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில் முதல் செசன் முழுவதும் தாக்குப்பிடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை மயங்க் அகர்வல் பெற்றுள்ளார். 1990-ல் மனோஜ் பிரபாகர் முதல் செசன் முழுவதும் விளையாடியிருந்தார. அதன்பின் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு மயங்க் அகர்வால் தாக்குப்பிடித்து விளையாடியுள்ளார்.

மதிண உணவு இடைவேளைக்குப்பின் விளையாடிய அவர் 84 பந்தில் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Similar News