செய்திகள்
திவ்யா கக்ரன்

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்ஸ்: திவ்யா கக்ரன் தங்கப் பதக்கம் வென்றார்

Published On 2020-02-20 12:09 GMT   |   Update On 2020-02-20 12:09 GMT
டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் தங்கப் பதக்கம் வென்றார்.
டெல்லியில் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் ஜப்பான் வீராங்கனை நருஹா மட்சுயுகி-யை வீழ்த்த தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

திவ்யா கக்ரன் பதக்கம் மூலம் இந்தியா இரண்டு தங்கத்தை வென்றுள்ளது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த சரிதா மோர் (59 கிலோ), பிங்கி (55 கிலோ), நிர்மலாக தேவி (50 கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
Tags:    

Similar News