செய்திகள்
2-வது டி20 கிரிக்கெட்: பனியின் தாக்கத்தை குறைக்க மைதானத்தில் ஸ்பெஷல் கெமிக்கல் தெளிப்பு
இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டியின்போது பனியின் தாக்கத்தை குறைக்க ஸ்பெஷல் கெமிக்கல் தெளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது. போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தற்போது பனிக்காலம் என்பதால் இரவு அளவுக்கு அதிகமாக பனி பொழியும்.
இதனால் ஆட்டத்தின்போது பந்து வீச்சாளர்கள் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்நிலையில் இந்தூர் மைதானத்தில் பனியின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஸ்பெஷல் கெமிக்கல் தெளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைமை ஆடுகள பராமரிப்பாளர் கூறுகையில் ‘‘பனியின் தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த மூன்று நாட்களாக மைதானத்திற்கு மேல் ஸ்பெஷல் கெமிக்கல் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மைதானத்தில் இருக்கும் புற்களுக்கு தண்ணீரும் பாய்ச்சவில்லை. இந்த போட்டியின்போது பார்வையாளர்கள் சிக்சர் மற்றும் பவுண்டரி மழையை கண்டு களிப்பர்’’ என்றார்.
இதனால் ஆட்டத்தின்போது பந்து வீச்சாளர்கள் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்நிலையில் இந்தூர் மைதானத்தில் பனியின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஸ்பெஷல் கெமிக்கல் தெளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைமை ஆடுகள பராமரிப்பாளர் கூறுகையில் ‘‘பனியின் தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த மூன்று நாட்களாக மைதானத்திற்கு மேல் ஸ்பெஷல் கெமிக்கல் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மைதானத்தில் இருக்கும் புற்களுக்கு தண்ணீரும் பாய்ச்சவில்லை. இந்த போட்டியின்போது பார்வையாளர்கள் சிக்சர் மற்றும் பவுண்டரி மழையை கண்டு களிப்பர்’’ என்றார்.