செய்திகள்
இந்தியாவை வீழ்த்த சீனியர் வீரர்களின் பங்களிப்பு அதிக அளவில் தேவை: இலங்கை வீரர் குசால் பெரேரா
டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்றால் சீனியர் வீரர்களின் பங்களிப்பு அதிக அளவில் தேவை என இலங்கை வீரர் குசால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் நேற்று நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும். இந்நிலையில் இந்தியாவை வீழ்த்த சீனியர் வீரர்களின் பங்களிப்பு அதிக அளவில் தேவை என இலங்கை வீரர் குசால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குசால் பேரேரா கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. ஆனால் ஒயிட்பால் கிரிக்கெட்டில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடினேன். அதில் சிறப்பாக விளையாடினாலும், என்னுடைய சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆகவே, இந்த தொடரில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
ஒரு அணியாக இணைந்து விளையாடுவது அவசியம். சீனியர் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அதேவேளையில், அணியில் சில இளம் பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் இருப்பது சிறப்பானது.
இந்தியா சிறந்த அணி. உலகளவில் முன்னணி வரிசையில் உள்ளது. ஒரு அணியாக மைதானத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய முயற்சிப்போம். எங்களுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து களம் இறங்குவோம்’’ என்றார்.
மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும். இந்நிலையில் இந்தியாவை வீழ்த்த சீனியர் வீரர்களின் பங்களிப்பு அதிக அளவில் தேவை என இலங்கை வீரர் குசால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குசால் பேரேரா கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. ஆனால் ஒயிட்பால் கிரிக்கெட்டில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடினேன். அதில் சிறப்பாக விளையாடினாலும், என்னுடைய சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. ஆகவே, இந்த தொடரில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.
ஒரு அணியாக இணைந்து விளையாடுவது அவசியம். சீனியர் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். அதேவேளையில், அணியில் சில இளம் பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் இருப்பது சிறப்பானது.
இந்தியா சிறந்த அணி. உலகளவில் முன்னணி வரிசையில் உள்ளது. ஒரு அணியாக மைதானத்தில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய முயற்சிப்போம். எங்களுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து களம் இறங்குவோம்’’ என்றார்.