செய்திகள்
கோல் அடித்த மகிழ்ச்சியை கொண்டாடும் கேரளா அணியினர்

ஐஎஸ்எல் கால்பந்து - ஐதராபாத்தை 5-1 என வீழ்த்தி அசத்தியது கேரளா

Published On 2020-01-06 03:56 GMT   |   Update On 2020-01-06 03:56 GMT
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் எப்.சி. அணியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கேரளா பிளாஸ்டர்ஸ்.
ஐதராபாத்:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஐதராபாத் அணியின் போபோ ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர், கேரளா அணியினர் ஆட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.

பர்த்லோமியோ 33 மற்றும் 75வது நிமிடத்திலும், துரோபரோவ் 39வது நிமிடத்திலும், மெஸ்சி பவுல் 45 நிமிடத்திலும், செலியாசென் சிங் 59வது நிமிடத்திலும் என மொத்தம் 5 கோல்கள் அடித்து அசத்தினர்.

இறுதியில், கேரளா அணி 5-1 என்ற கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 
இதன்மூலம் கேரளா அணி 2 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி என 11 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 1 வெற்றி, 2 டிரா, 8 தோல்வி என 5 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News