செய்திகள்
கடைசி ஒருநாள் கிரிக்கெட்: தீபக் சாஹருக்குப் பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நாளைமறுநாள் (22-ந்தேதி) நடக்கிறது. 2-வது போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. அவரது காயம் குணமடைய முழு ஓய்வு தேவை என்பதால் 3-வது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சைனி ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் விளையாடவில்லை. இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்பினால் சைனி கட்டாக் போட்டியில் அறிமுகம் ஆவார்.
3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நாளைமறுநாள் (22-ந்தேதி) நடக்கிறது. 2-வது போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. அவரது காயம் குணமடைய முழு ஓய்வு தேவை என்பதால் 3-வது போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சைனி ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் விளையாடவில்லை. இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்பினால் சைனி கட்டாக் போட்டியில் அறிமுகம் ஆவார்.