செய்திகள்
கேஎல் ராகுல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம்

Published On 2019-12-19 16:25 GMT   |   Update On 2019-12-19 16:25 GMT
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா:

13வது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்க வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கேப்டனாக செயல்படுவதிலும் சிறந்து விளங்குவார் என தெரிவித்தார்.
Tags:    

Similar News