செய்திகள்
கொல்கத்தா அணி வீரர்களை ஏலம் எடுக்கும் காட்சி

ஐபிஎல் ஏலம்: 48 வயது நிரம்பிய வீரரை ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Published On 2019-12-19 14:59 GMT   |   Update On 2019-12-19 14:59 GMT
48 வயது நிரம்பிய பிரவின் தாம்பேவை 20 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
கொல்கத்தா:
 
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. 

இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றுவருகிறது.

பல்வேறு அணிகள் போட்டி போட்டுக்கொண்டு வீரர்களை ஏலம் எடுத்துவருகின்றனர். மேலும், சில வீரர்கள் ஏலத்தில் விலைபோகமலும் உள்ளனர்.  

இதற்கிடையில், 2013-ம் ஆண்டு தனது 44-வது வயதில் ராஜஸ்தான் அணிக்காக சுழல்பந்து வீச்சாளராக ஐபிஎல் போட்டியில் களமிறங்கியவர் பிரவின் தாம்பே. இவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 



இந்நிலையில், தற்போது 48 வயது நிரம்பிய பிரவின் தாம்பேவின் பெயர் 2020 ஐபிஎல் ஏலத்தில் அறிவிக்கப்பட்டது. அவரது அடிப்படை விலை 20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. 

அதிக வயது காரணமாக அவரை எந்த அணியினரும் ஏலம் எடுக்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் பிரவின் தாம்பேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலையில் ஏலம் எடுத்தனர். 

கொல்கத்தா அணி பிரவின் தாம்பேவை ஏலம் எடுத்த போது மற்ற அணியை சேர்ந்த உரிமையாளர்கள் கைகளை தட்டி வரவேற்பு கொடுத்தனர்.




Tags:    

Similar News