செய்திகள்
இயான் மோர்கன்

ஐபிஎல் ஏலம் - மோர்கனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி

Published On 2019-12-19 10:37 GMT   |   Update On 2019-12-19 10:37 GMT
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இயான் மோர்கனை 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி.
கொல்கத்தா:

13-வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று மதியம் நடைபெற்றது.

இதில், முதல் வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் லின்னை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

அடுத்ததாக, இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனை 5.25 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்திய வீரர் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை 1.5 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது.



இந்திய வீரர்கள் புஜாரா மற்றும் ஹனுமா விகாரி ஆகியோரை ஏலத்தில் எடுக்கவில்லை.
Tags:    

Similar News