செய்திகள்
கோல் அடித்த மகிழ்ச்சியில் சுனில் சேத்ரி

ஐஎஸ்எல் கால்பந்து - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 என வீழ்த்தியது பெங்களூரு

Published On 2019-12-18 16:30 GMT   |   Update On 2019-12-18 16:30 GMT
கவுகாத்தியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 என்ற கணக்கில் பெங்களுரு அணி வெற்றி பெற்றது.
கவுகாத்தி:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என சமனிலை வகித்தது. 

இரண்டாவது பாதியில் பெங்களுரு அணியின் சுனில் சேத்ரி 68வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து, ஆல்பர்ட் சேரன் 80வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், பெங்களூரு அணி 2-0 என நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் பெங்களூரு அணி தான் ஆடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
Tags:    

Similar News