செய்திகள்
கவுதம் காம்பிர்

‘பிங்க்-பால்’ போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களை வேறு விதமாக பயன்படுத்த வேண்டும்: கவுதம் காம்பிர்

Published On 2019-11-21 12:49 GMT   |   Update On 2019-11-21 12:49 GMT
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர்களை வித்தியாசமாக பயன்படுத்த வேண்டும் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. முதன்முதலாக இரு அணிகளும் பிங்க்-பாலில் விளையாடுகின்றன.

‘பிங்க்-பால்’ பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். சுழற்பந்து வீச்சார்களுக்கு சவாலாக இருக்கும். பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கவுதம் காம்பிர் பிங்க்-பால் டெஸ்ட் குறித்து கூறுகையில் ‘‘பிங்க்-பால் எப்படி செயலாற்றுகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறேன். ஏனென்றால் நான் கூக்கபுர்ரா பந்தில் விளையாடிள்ளேன். அது முற்றிலும் வித்தியாசமானது. ஒரு விஷயம், ஒளி வெளிச்சத்தின் கீழ் விளையாடும்போது ரிஸ்ட் ஸ்பின்னரை எதிர்கொள்வது கடினமான என்பதை நான் உணர்ந்தேன்.

மற்றொரு விஷயம் கேப்டன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை வித்தியாசமாக கையாள வேண்டியது தேவை. ரெட்-பாலில் அவர்களை காலையில் முன்னதாகவே வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவார்கள். ஆனால், டே-நைட் போட்டிகளில் பொதுவாக அவர்களை ஒளி வெளிச்சத்தின்போது பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News