செய்திகள்
சகா, ரிஷப் பந்த்

யாருடன் போட்டி என்பது பிரச்சினை அல்ல: சகா சொல்கிறார்

Published On 2019-11-06 10:59 GMT   |   Update On 2019-11-06 10:59 GMT
எம்எஸ் டோனியுடன் போட்டியா?, ரிஷப் பந்துடன் போட்டியோ? என்பது பிரச்சினை அல்ல. போட்டிக்கு தயாராக இருப்பதுதான் முக்கியம் என சகா தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட சகா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் சுமார் ஓராண்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த சமயத்தில் ரிஷப் பந்த் டெஸ்ட் விக்கெட் கீப்பராக அறிமுகம் ஆனார். ரிஷப் பந்த் வருகையால் சகாவின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது.

இந்த சமயத்தில்தான் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சகா தேர்வு செய்யப்பட்டார். சிறப்பான விக்கெட் கீப்பர் பணியால் அனைவரது மனதையும் ஈர்த்தார்.

இதனால் வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் கிடைக்கும் என சகா நம்பிக்கையில் உள்ளார்.

எம்எஸ் டோனி அணியில் இருந்ததால் சுமார் ஓராண்டுகளுக்கு மேலாக விளையாட வாய்ப்பில்லாமல் இருந்த சகா, தனது இடத்தை ரிஷப் பந்திடம் இழந்து மீண்டும் பெற்றுள்ள நிலையில், யாருடன் போட்டி என்பது முக்கியமல்ல என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘போட்டி டோனிக்கு எதிராகவா அல்லது ரிஷப் பந்துக்கு எதிராகவா என்பது பெரிய விஷயம் அல்ல. போட்டியை எப்படி அணுகுகிறேனோ, அதேபோல் பயிற்சியை அணுகுகிறேன். நான் என்னை எப்போதுமே வர இருக்கிற போட்டிக்கு ஏற்ப தயார் படுத்திக் கொள்வேன்.

என்னுடைய கவனம் யாருடன் போட்டியிட்டு அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால், அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அணித்தேர்வு உள்பட மற்ற விஷயங்கள் என்னுடைய கையில் இல்லை’’ என்றார்.
Tags:    

Similar News