செய்திகள்
ஷிகர் தவான்

வங்காளதேசத்திற்கு 149 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

Published On 2019-11-03 20:44 IST   |   Update On 2019-11-03 20:44:00 IST
டெல்லியில் நடைபெற்று வரும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்திற்கு 149 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியாவின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். ஆனால் கடைசி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த கேல்எல் ராகுல் 17 பந்தில் 15 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி 13 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார். ஷிகர் தவான் 41 ரன்கள் சேர்த்து ரன்அவுட் ஆனார்.

ரிஷப் பந்த் 27 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களும் அடிக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. இதனால் வங்காளதேச அணிக்கு 149 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

Similar News