செய்திகள்
பிசிசிஐ தலைவர் கங்குலி, எம்எஸ் டோனி

சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெறமாட்டார்கள்: டோனி எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

Published On 2019-10-23 10:10 GMT   |   Update On 2019-10-23 10:10 GMT
எம்எஸ் டோனி இந்திய அணியில் விளையாடுவாரா என்பது புரியாத புதிராக உள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி அதுகுறித்து பதில் அளித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. கேப்டன் பதவிகளில் இருந்து விலகிய அவர், தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

சமீப காலமாக போட்டியை சிறப்பாக முடிப்பதில் எம்எஸ் டோனி திணறி வருகிறார். 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் டோனி சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

ஆனால், கிரிக்கெட் துறையைச் சேர்ந்தவர்கள் ஓய்வு என்பது எம்எஸ் டோனியுடன் முடிவு. அவர்தான் ஓய்வு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக இன்று பொறுப்பேற்ற சவுரவ் கங்குலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கங்குலி ‘‘சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற்று விடமாட்டார்கள். நான் அவருடன் இதுகுறித்து பேச இருக்கிறேன்’’ என்றார்.

இதனால் எம்எஸ் டோனி தற்போது ஓய்வு பெற மாட்டார் என்பது தெளிவாகியுள்ளது.
Tags:    

Similar News