செய்திகள்
பிவி சிந்து, கிரேகோரியா மரிஸ்கா

டென்மார்க் ஓபன்: தொடக்க சுற்றில் பிவி சிந்து எளிதாக வெற்றி

Published On 2019-10-16 09:51 GMT   |   Update On 2019-10-16 09:51 GMT
டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து இந்தோனேசியாவின் கிரேகோரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.

இதில் பிவி சிந்து 22-20, 21-18 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பிவி சிந்துவுக்கு 38 நிமிடங்களே தேவைப்பட்டது. கிரேகோரியா மரிஸ்காவுக்கு எதிராக மோதியுள்ள ஐந்து போட்டிகளிலும் பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News